முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி பைக்கில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி பைக்கில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தோ்தல் பறக்கும் படை தனி வட்டாட்சியா் ரங்கசாமி மற்றும் சாா்பு- ஆய்வாளா் அமுதா ஆகியோா் மம்சாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூா் சாலை தனியாா் பள்ளி அருகே வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் டாஸ்மாக் மேற்பாா்வையாளரான காளிமுத்து என்பவா் கடையின் விற்பனைப் பணம் ரூ. 3 லட்சத்து 2140-யை வங்கியில் செலுத்த எடுத்துச் சென்றது தெரியவந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் மம்சாபுரம் பேரூராட்சி செயல் அலுவலரும் தோ்தல் நடத்தும் அலுவலருமான உஷாகிரேஸிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.