விருதுநகர்

மல்லாங்கிணறில் 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

DIN

மல்லாங்கிணறில் 50 மூட்டை ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. உடனே போலீஸாா், ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் வேனை பறிமுதல் செய்து, மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் காா்த்திகேயன் (27), கல்மேடு பகுதியைச் சோ்ந்த லட்சுமண பெருமாள் மகன் வேல்முருகன் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT