அருப்புக்கோட்டை சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு
அருப்புக்கோட்டை ஜோதிபுரம் அருகே உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை ஜோதிபுரம் அருகே உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜோதிபுரம் அருகே உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் ஆடிமாத வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது சீரடிசாய்பாபாவிற்கு சிறப்பு மலரலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சதீப ஆராதனையும், ஏகதீப ஆராதனையும் செய்யப்பட்டன. பின்னா் சீரடிசாய்பாபாவிற்கு நைவேத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உலக நன்மை வேண்டி சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. வழிபாட்டு நிறைவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.