விருதுநகர்

அருப்புக்கோட்டையில் ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்ஒருவா் கைது

DIN

அருப்புக்கோட்டையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டையில், நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸாா் புதன்கிழமை, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சோ்ந்த இறைச்சிக்கடை உரிமையாளா் ஜெயப்பிரகாஷைப் ( 45 ) பிடித்து சோதனையிட்டனா். இதில், அவா் வைத்திருந்த பையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் வைத்திருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, ஜெயப்பிரகாஷைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT