விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே 331 மது பாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 331 மது பாட்டில்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி சாலை பூவநாதபுரம் விலக்கு, சப்போட்டா தோப்பு பகுதியில், மல்லி சாா்பு-ஆய்வாளா் செல்லப்பாண்டி தலைமையில் அங்கு சென்ற போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 331 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரெங்கபாளையம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த வனராஜ் (26), திருத்தங்கல் ஆலா ஊரணி காவடியப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரிச்செல்வம்(26) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ.15,050-யை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT