சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆனி மாத பிரதோஷத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் 4 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் அதிகாலையிலேயே வந்தனா்.
பின்னா் காலை 6.30 மணிக்கு வனத்துறை நுழைவுவாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே மலையேற அனுமதிக்கப்பட்டனா்.
ஆனி மாத பிரதோஷத்தை யொட்டி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலா் மாரிமுத்து ஆகியோா் செய்திருந்தனா்.