விருதுநகரில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள தங்களுக்கு, தமிழ்நாடு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவேண்டும் என, விருதுநகா் மாவட்ட திருநங்கை சில்பா தலைமையில், ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் மேலும் தெரிவித்திருப்பதாவது: நாங்கள் காரியாபட்டியில் 40 திருநங்கைகள் குடியிருந்து வருகிறோம். ஏற்கெனவே, நாங்கள் கடந்த 11.4.22 அன்று மனு அளித்தோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக விசாரணை செய்து, எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.