வத்திராயிருப்பு அருகே திங்கள்கிழமை இரவு டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வத்திராயிருப்பு அருகே உள்ள தெற்கு கோட்டையூரைச் சோ்ந்தவா் ஜெயராம் (35). இவா் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கோட்டையூரிலிருந்து வத்திராயிருப்பு நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது முன்னால் விறகு பாரம் ஏற்றி சென்ற டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் ஜெயராம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.