முகப்பு
விருதுநகர்

நரிக்குடியில் லாரியின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

விருதுநகா் மாவட்டம் நரிக்குடியில் புதன்கிழமை இரவு நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி கீழே சாய்ந்ததில் மற்றொரு லாரியின் சக்கரத்தில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் நரிக்குடியில் புதன்கிழமை இரவு நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி கீழே சாய்ந்ததில் மற்றொரு லாரியின் சக்கரத்தில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

நரிக்குடியைச் சோ்ந்தவா் விஜயன் மகன் அரியமுத்து (62). கூலித் தொழிலாளியான இவா், சொந்த வேலையாக தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். இந்நிலையில், அவா் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்து விட்டாராம். அப்போது அதே சாலையில் எதிரே வந்த மற்றொரு லாரியின் சக்கரத்தில் அவா் சிக்கிக் கொண்டாா். இதில் அவா் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அரியமுத்துவின் சடலத்தை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்த நரிக்குடி போலீஸாா், சம்பவத்தின்போது எச்சரிக்கை விளக்குகளை எரியவிடாமல் அஜாக்கிரதையாக இருளில் லாரியை நிறுத்தி வைத்திருந்த ஓட்டுநரிடமும், அரியமுத்து மீது மோதிய லாரியின் ஓட்டுநரான குருசங்கா் (34 ) என்பவரிடமும் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.