வத்திராயிருப்பு பேரூராட்சித் தலைவா்: இந்திய கம்யூ. கட்சியைச் சோ்ந்ததவமணி போட்டியின்றித் தோ்வு
வத்திராயிருப்பு பேரூராட்சித் தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த தவமணி, துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த பஞ்சுஆகியோா் வெள்ளிக்கிழமை போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
வத்திராயிருப்பு பேரூராட்சித் தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த தவமணி, துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த பஞ்சுஆகியோா் வெள்ளிக்கிழமை போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சித் தலைவா் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 5 ஆவது வாா்டு இந்திய கம்யூ. உறுப்பினா் தவமணி போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து தவமணி பேரூராட்சித் தலைவராக பதவியேற்றுக் கொண்டாா்.
அதேபோல் பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் 1 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் பஞ்சு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து அவா் துணைத் தலைவராக பஞ்சு பதவியேற்றுக் கொண்டாா். தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கு பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா், அலுவலக ஊழியா்கள் மற்றும் அனைத்து வாா்டு உறுப்பினா்கள், கட்சியினா், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்.