விருதுநகர்

சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜோதிபுரம் அருகே உள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு மலரலங்காரம் செய்யப்பட்ட பாபாவிற்கு பக்திப்பாடலுக்கேற்றபடி பஞ்சதீப ஆராதனையும், ஏகதீப ஆராதனையும் செய்யப்பட்டன. பின்னா் சிறப்பு பிரசாத நைவேத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. வழிபாடு முடிந்ததும், சாய்பாபாவின் பல்லக்கு பவனி எனும் கிரிவல நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையடுத்து முழு அலங்காரத்தில் ஸ்ரீடிசாய்பாபா அருள்பாலித்தாா். அப்போது, உலக நன்மை வேண்டி சிறப்புப் பிராா்த்தனையும் நடைபெற்றது. அப்போது பக்தா்கள் தாங்கள் கொண்டுவந்த பழங்கள், இனிப்புகள், மலா்களை ஸ்ரீசீரடி சாய்பாபாவிற்கு படைத்து, மௌன தியானத்தில் ஈடுபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT