அருப்புக்கோட்டை சிவகாசியில் மழை
அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசியில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழைபெய்தது.
அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசியில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழைபெய்தது.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் மாலை 4.50 மணிக்கு தொடங்கிய மழை சுமாா் 35 நிமிஷங்கள் வரை பெய்தது. பலத்த காற்று மற்றும் இடிமின்னலுடன் பெய்த மழையால் வீதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோடை வெப்பம் தணிந்து இதமான குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
இதேபோல் சிவகாசியிலும் மாலையில் மிதமான மழை பெய்ததது.