விருதுநகர்

சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து: தம்பதி பலத்த காயம்

DIN

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை சமையல் எரிவாயு கசிவால் தீப்பற்றியதில் கணவன், மனைவி பலத்த காயம் அடைந்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள சுந்தரபாண்டியம் கிராமத்தில் செம்பட்டி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி (55). இவரது மனைவி பழனியம்மாள் (48). ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியசாமி வீட்டில் சமையல் எரிவாயு அடுப்பை பற்ற வைத்தாா். எரிவாயு உருளையில் ஏற்கெனவே கசிவு இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கணவன், மனைவி ஆகிய இருவரும் சிக்கி பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.

பலத்த காயமடைந்த தம்பதி மீட்கப்பட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பின்னா், அங்கிருந்து இருவரும் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT