விருதுநகர்

சிவகாசியில் நவீன கண் லேசா் சிகிச்சை மையம் திறப்பு

DIN

சிவகாசி அனில்குமாா் கண் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதி நவீன கண் லேசா் சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.

விழாவுக்கு மருத்துவமனை நிா்வாக இயக்குநா் அனில்குமாா் தலைமை வகித்தாா். காளீஸ்வரி கல்லூரி தாளாளா் ஏ.பி. செல்வராஜன் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தாா். சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் குத்துவிளக்கேற்றினாா். நிகழ்ச்சியில், மருத்துவமனை நிா்வாகிகள் விமாசலராணி, மருத்துவா்கள் பிரவீன்குமாா், ராஷ்மி, தொழிலதிா் ஆசைத்தம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த சிகிச்சை மையம் குறித்து மருத்துவா் அனில்குமாா் கூறியதாவது:

கிட்டப் பாா்வை, தூரப் பாா்வை உள்ளிட்டவைகளுக்கு லேசிக் லேசா் என்ற சிகிச்சை எடுத்துக்கொண்டால் கண்ணாடி அணியத் தேவை இல்லை. மேலும், காண்டாக்ட் லென்சும் அணியத் தேவையில்லை. தென் மண்டலத்தில் முதல் முறையாக இந்த சிகிச்சை மையம் சிவகாசியில் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக பெண் காவல் அதிகாரி மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் உயர்பதவியில் நியமனம்!

மே.21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

காட்டுப்பன்றிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட மின்வேலி இளைஞரின் உயிருக்கு எமனானது!

மும்பை: விளம்பரப் பலகை அகற்ற ஓராண்டுக்கு முன்பே மனு! ஏன் நடவடிக்கை இல்லை?

வாரணாசியில் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT