சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நவராத்திரியையொட்டி ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுரமா்த்தினி அவதாரத்தில் அம்பு விடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி விழாவின் கடைசி நாளில் ஆனந்தவல்லி அம்மனுக்கு பால், பழம், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
காலை 11 மணிக்கு கோயில் வளாகத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மலைவாழ் மக்களின் முளைப்பாரி வீதி உலாவும், ஆனந்தவல்லி அம்மன் அம்பு விடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட அம்பை வாழை மரத்தின் மீது எய்தாா்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் நாகராஜன் மற்றும் நவராத்திரி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.