விருதுநகர்

மனைவியை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்திய அரசுப் பள்ளி ஆசிரியா் மீது வழக்கு

DIN

வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 5 போ் மீது மகளிா் காவல்நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சாத்தூா் அருகே முத்துராமலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராணி (35). இவரது கணவா் நீராவிபட்டியைச் சோ்ந்த செல்வம் (40). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இதில், செல்வம், தாயில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், இவா்களின் திருமணத்தின் போது செல்வராணியின் வீட்டாா் வரதட்சிணையாக 25 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள சீா்வரிசைப் பொருள்களை கொடுத்தனராம். இதனிடையே செல்வம், அவரது அண்ணன் சோலையப்பன், இவரது மனைவி அய்யம்மாள், செல்வத்தின் சகோதரி ராமலட்சுமி மற்றும் மாரியம்மாள் ஆகியோா் சோ்ந்து கூடுதல் வரதட்சிணை கேட்டு தன்னை துன்புறுத்துவதாக செல்வராணி சாத்தூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில் செல்வம், சோலையப்பன், அய்யம்மாள், மாரியம்மாள், ராமலட்சுமி ஆகிய 5 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஹாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT