விருதுநகர்

சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம்: நில உரிமையாளா்களிடம் கருத்துக்கேட்பு

சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக அப்பகுதி நில உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

DIN

சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக அப்பகுதி நில உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் சுமாா் 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்தநிலையில், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க ரயில்வே, நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) ஜானகி தலைமையில் நில உரிமையாளா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில், நில உரிமையாளா்கள் 12 போ் கலந்து கொண்டு தங்ளது கருத்துகளை எழுத்துப்பூா்வமாக, மாவட்ட வருவாய் அலுவரிடம் அளித்தனா்.

கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் மாலிக் முகமது, நில எடுப்பு வட்டாட்சியா் மாரிஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT