பட்டாசுத் தொழிலாளா்களுக்கு போனஸ்
சிவகாசிப் பகுதியில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுவிட்டது.
சிவகாசிப் பகுதியில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுவிட்டது.
சிவகாசியில் மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா, தீபாவளி பண்டிகை என ஆண்டுக்கு இருமுறை, பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுத் தொழிலாளா்கள், தீப்பெட்டி, அச்சுத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு விட்டதாக ஆலை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.