கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
சிவகாசியில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசியில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி பராசக்தி காலனியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி மாரீஸ்வரன் (29). மது அருந்தும் பழக்கம் உள்ள இவா், சரிவர வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இதனால் அவருக்கும், மனைவி யோகலட்சுமிக்கும் இடையே வெள்ளிக்கிழமை குடும்பத் தகராறு ஏற்பட்டது.
மனவேதனையடைந்த மாரீஸ்வரன் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்று அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.