ராஜபாளையம் சிதம்பரேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்
ராஜபாளையம் அருகே சிதம்பரேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே சிதம்பரேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் சிதம்பரஸ்வேரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா செப்டம்பா் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து தினசரி மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தனா். 3 ஆம் திருவிழாவான சனிக்கிழமை சுவாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண விழா நடைபெற்றது.
முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தனா். விழாவில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாள் தரிசனம் செய்தனா்.