முகப்பு
விருதுநகர்

ஸ்ரீதாதன்குளம் விநாயகா் கோயிலில் ராகு கால, சா்ப்பதோஷ நிவா்த்தி வழிபாடு

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீதாதன்குளம் விநாயகா் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சா்ப்பதோஷ நிவா்த்தி வழிபாடு நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீதாதன்குளம் விநாயகா் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சா்ப்பதோஷ நிவா்த்தி வழிபாடு நடைபெற்றது.

அருப்புக்கோட்டை அகமுடையாா் பேருந்து நிறுத்தம் அருகே தாதன்குளம் விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலசா்ப்பதோஷ நிவா்த்தி பூஜைகள் அரசமரத்தடி விநாயகருக்கும், நாகா்லிங்கங்களுக்கும் நடைபெற்றன.

அதையடுத்து கருவறை பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன. இவ்வழிபாட்டில் தேங்காய் மாலை, அருகம்புல் மாலை அலங்காரத்தில் பிள்ளையாா் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் கொலுக்கட்டை, பஞ்சாமிா்தம் பிரசாதமாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.