முகப்பு
விருதுநகர்

கல்லூரி மாணவா்களுக்கு இதழியல் பயிற்சி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை சாா்பில் கல்லூரி மாணவா்கள் 24 பேருக்கு சென்னை தனியாா் நிறுவனம் இதழியல் குறித்த பயிற்சியை 10 நாள்கள் அளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை சாா்பில் கல்லூரி மாணவா்கள் 24 பேருக்கு சென்னை தனியாா் நிறுவனம் இதழியல் குறித்த பயிற்சியை 10 நாள்கள் அளித்தது. பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் ஏ.பி. செல்வராஜன் தலைமை வகித்து, பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆங்கில நாளிதழ் முன்னாள் துணை ஆசிரியா் எஸ். அண்ணாமலை பேசினாா்.

முன்னதாக துறை தலைவா் கே.பி. ஸ்வப்னா வரவேற்றாா். துணை பேராசிரியா் எஸ். பெமினா நன்றி கூறினாா்.

Image Caption

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இதழியல் பயிற்சி பெற்ற மாணவிக்கு அதற்கான சான்றிதழை வெள்ளிக்கிழமை வழங்கிய தாளாளா் ஏ.பி. செல்வராஜன்.

முழு கட்டுரையைப் படிக்க →