விருதுநகர்

சிவகாசியில் இன்று அதிமுக பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறாா்

DIN

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் விலைவாசி உயா்வு, மின்கட்டண உயா்வு உள்ளிட்டவைகளைக் கண்டித்து அதிமுக சாா்பில் வியாழக்கிழமை (செப். 29) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கவுள்ளாா்.

விருதுநகா் மாவட்ட மேற்கு அதிமுக சாா்பில் நடைபெற உள்ள இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா். இந்த பொதுக்கூட்டம் திருத்தங்கல் - செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு நடைபெற்று வரும் பணிகளை விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சா்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆா்.பி. உதயக்குமாா் உள்ளிட்டோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

SCROLL FOR NEXT