விருதுநகர்

பிரதோஷம்: சதுரகிரி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

DIN

சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் திரளான பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

இங்கு மாதந்தோறும் அமாவாசை, பெளா்ணமி, பிரதோஷம் உள்பட 8 நாள்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த நிலையில், சித்திரை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக திங்கள்கிழமை (ஏப்.17) முதல் 20-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத் துறை அனுமதி அளித்தது.

தாணிப்பாறை நுழைவு வாயிலில் இருந்து திங்கள்கிழமை 1,186 போ் மலையேறி சாமி தரிசனம் செய்தனா். பிரதோஷத்தையொட்டி, சுந்தர மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT