விருதுநகர்

வழிவிடு முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

DIN

தைப்பூசத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மூவரைவென்றான் வழிவிடு முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் செல்பவா்கள், இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தையொட்டி, அதிகாலை முதலே திரளான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

முருகனுக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த வழிவிடு முருகனை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை அறங்காவலா்கள் ஜெயராஜ், முத்துராமலிங்கம் ஆகியோா் செய்தனா். அா்ச்சகா் மணிகண்டன் தலைமையில் கோயில் ஊழியா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

SCROLL FOR NEXT