சிவகாசி மெஃப்கோசிலங் பொறியியல் கல்லூரியில் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் விக்யான் பிரசாா் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் முதல்வா் எஸ். அறிவழகன் தலைமை வகித்தாா். மதுரை தனியாா் சித்த மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குநா் ஜெயவெங்கடேஷ் முகாமை தொடக்கிவைத்தாா்.
பயிற்சியாளா்கள் ராஜேந்திரன், கண்ணபிரான் ஆகியோா் மாணவா்களுக்குப் பயிற்சி அளித்தனா். மாணவா்கள் பாடங்களை எளிமையாக புரிந்து கொள்வதற்காக இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் சுமாா் 256 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.