விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மணல் கடத்திய ஒருவா் கைது

DIN

 ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதி இன்றி மணல் கடத்தி வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் பகுதியில் உதவி ஆய்வாளா் முத்துக்குமரன் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூா் - செண்பகதோப்பு சாலையில் வந்த டிராக்டரை சோதனை செய்ததில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிவந்தது தெரிந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் குருசாமி(60) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

டிராக்டா் உரிமையாளரான ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சோ்ந்த ராமா் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

SCROLL FOR NEXT