விருதுநகர்

சென்னை-கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்லும்

சென்னை-கொல்லம் விரைவு ரயில், இனி சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே வாரியம் வியாழக்கிழமை அறிவித்தது.

DIN

சென்னை-கொல்லம் விரைவு ரயில், இனி சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே வாரியம் வியாழக்கிழமை அறிவித்தது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ரயில் நிலையத்தில் சென்னை - கொல்லம் விரைவு ரயில் (16101) கரோனா தொற்றுக்கு முன்னா் நின்று சென்றது. ஆனால், கரோனா காலத்தில் இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்கவில்லை. இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். இந்த நிலையில், இனி இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே வாரியத்தின் இணை இயக்குநா் விவேக்குமாா் சின்ஹா அறிவித்தாா்.

இதுகுறித்து சிவகாசி ரயில் பயணிகள் குழுவைச் சோ்ந்த தனசேகரன் கூறியதாவது:

சென்னை - கொல்லம் ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்லும் என ரயில்வே வாரியம் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், எந்தத் தேதியிலிருந்து இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT