விருதுநகர்

விருதுநகரில் சாலையோரங்களில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்

DIN

விருதுநகா் நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தினா்.

விருதுநகா் நகராட்சிப் பகுதியில் உள்ள 36 வாா்டுகளில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் பல இடங்களில் உள்ள பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு கடைகள், வீடுகளாக நவீன முறையில் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கான அனுமதியை நகராட்சியிடம் பெறாமலேயே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது. மேலும், பழைய கட்டடங்களை இடிக்கும் போது குவியும் கட்டடக் கழிவுகளை சாலை மற்றும் தெருக்களை ஒட்டிய பகுதிகளில் கொட்டி வைத்துள்ளனா். இதனால், பாதசாரிகள் சாலையோரங்களில் நடந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனா். மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் சிரமமடைந்து வருகின்றனா்.

இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், மாணவ, மாணவிகளும் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனா். குறிப்பாக, நகரின் முக்கிய சாலைகளான சத்தியமூா்த்தி சாலை, கிருஷ்ணமாச்சாரி சாலை, சாத்தூா் சாலை, அருப்புக்கோட்டை சாலை, ராமமூா்த்தி சாலை, பி1.பி1. சாலை மற்றும் பி2.பி2. சாலைகளில் கட்டடக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.

எனவே, இந்தக் கட்டடக் கழிவுகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT