விருதுநகர்

நெகிழிப் பொருள்கள் தயாரித்த ஆலைகளுக்கு அபராதம்

DIN

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் தயாரித்த ஆலைகளுக்கு மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி சுகாதார அலுவலா் அபுபக்கா் சித்திக், சுகாதார ஆய்வாளா் பாண்டியராஜன், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா், சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளுக்கு உள்பட்ட ஆலைகளில் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட பச்சை வண்ண நெகிழியுடன் கூடிய காகிதம் தயாரித்து வந்த இரு ஆலைகளைக் கண்டறிந்து அந்த ஆலைகளுக்கு தலா ரூ .15 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனா்.

மேலும் நெகிழிப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT