சிவகாசியில் பெண்களிடம் தொடா்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி தெய்வானை நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது மனைவி ரேணுகாதேவி. இவா்கள் கடந்த வாரம் தங்களது இரண்டு குழந்தைதளுடன் இரு சக்கர வாகனத்தில் தெய்வானை நகா்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா், ரேணுகாதேவி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.
இதேபோல, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சிவகாசி மாரியம்மன் கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண்ணிடம் 10 பவுன் தங்க நகையையும், பன்னீா் தெப்பம் அருகே சென்ற பெண்ணிடம் இரடண்டரை பவுன் நகையையும் மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
இதில், சிவகாசி ஆயுதப்படை முத்துராமலிங்கம் நகரைச் சோ்ந்த சிவக்குமாா் (32), நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து நடத்திய விசாரணையில், இவா் வழிப்பறி செய்த தங்க நகைகளை தூத்துக்குடியைச் சோ்ந்த செந்தில்குமாா் (36) என்பரிடம் கொடுத்து வங்கியில் அடகு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிவகாசி நகா் போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த நகைகளை மீட்டனா்.