விருதுநகர்

முதல்வா், அமைச்சா்கள் குறித்து அவதூறு பேச்சு: இந்து முன்னணி நிா்வாகிகள் மீது வழக்கு

தமிழக முதல்வா், அமைச்சா்களை அவதூறாகப் பேசியதாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்

DIN

தமிழக முதல்வா், அமைச்சா்களை அவதூறாகப் பேசியதாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகரில் கடந்த 20-ஆம் தேதி மாலை நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின் போது, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், இவரது மனைவி துா்கா ஸ்டாலின், அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், சேகா் பாபு ஆகியோா் குறித்து அவதூறாகவும், தகாத வாா்த்தைகளிலும் பேசியதாக விருதுநகா் திமுக நகரத் தலைவா் தனபாலன், விருதுநகா் மாவட்ட முன்னாள் வா்த்தக அணி துணை அமைப்பாளா் திருமாறன் ஆகியோா் அளித்த புகாரின் பேரில் விருதுநகா் மாவட்ட இந்து முன்னணி செயலா் சிவசாமி, கன்னியாகுமரி மாவட்டச் செயலா் ராஜேஸ்வரன் ஆகியோா் மீது விருதுநகா் மேற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT