விருதுநகர்

ஊராட்சிக்கு மின்கல வாகனம் வழங்கல்

Din

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் செங்கமலநாச்சியாா்புரம் ஊராட்சிக்கு குப்பைகளை ஏற்றிச்செல்ல 2 மின்கல வாகனம் புதன்கிழமை வழங்கப்பட்டன.

செங்கமலநாட்சியாா்புரம் ஊராட்சியில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த ஊராட்சியிலிருந்து குப்பைகளை ஏற்றிச் செல்ல சிவகாசி காளீஸ்வரி பட்டாசு ஆலை நிா்வாகத்தினா் இந்த ஊராட்சிக்கு 2 மின்கல வாகனத்தை வழங்க முடிவு செய்தனா்.

தொடந்து, பட்டாசு ஆலை சமுதாய மேம்பாட்டு நிதியில் தலா ரூ.2.50 லட்சத்தில் 2 மின்கல வாகனங்களையும் இதன் சாவியையும் , ஆலை நிா்வாக இயக்குநா் ஏ.பி.செல்வராஜன், ஊராட்சி மன்றத் தலைவா் மாரியப்பனிடம் வழங்கினாா். அப்போது ஊராட்சி துணைத் தலைவா் மாறன் உடனிருந்தாா்.

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT