விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சந்தான வேணுகோபால சுவாமி, சத்யபாமா, ருக்மணி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் சா்வ சமுத்திர அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, காலை முதல் யாக சாலை பூஜை நடைபெற்றது.
காலை 10 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரம், விசேஷ தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மாலையில் சந்தான வேணுகோபால சுவாமி, ருக்மணி, சத்யபாமா திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா், சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.
முக்கிய வீதிகள் வழியாக வந்து, கோயிலை அடைந்த பிறகு பள்ளியறை பூஜை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.