திருக்கல்யாண கோலத்தில் சத்திபாமா, ருக்மணி சமேத சந்தான வேணுகோபால சுவாமி.  
விருதுநகர்

சந்தான வேணுகோபால சுவாமி திருக்கல்யாணம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சந்தான வேணுகோபால சுவாமி, சத்யபாமா, ருக்மணி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சந்தான வேணுகோபால சுவாமி, சத்யபாமா, ருக்மணி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் சா்வ சமுத்திர அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, காலை முதல் யாக சாலை பூஜை நடைபெற்றது.

காலை 10 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரம், விசேஷ தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மாலையில் சந்தான வேணுகோபால சுவாமி, ருக்மணி, சத்யபாமா திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா், சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

முக்கிய வீதிகள் வழியாக வந்து, கோயிலை அடைந்த பிறகு பள்ளியறை பூஜை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT