வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்ணாடி மணி, சுடுமண் பதக்கம்
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணி, சுடுமண்ணாலான பதக்கம் ஆகியவை புதன்கிழமை கண்டறியப்பட்டன.
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணி, சுடுமண்ணாலான பதக்கம் ஆகியவை புதன்கிழமை கண்டறியப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2,850-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், புதன்கிழமை தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியில் நீல நிற கண்ணாடி மணி, சுடுமண்ணாலான பதக்கம் ஆகியவை கண்டறியப்பட்டன. இதை முன்னோா்கள் அணிகலன்களாகப் பயன்படுத்தியதாக அகழாய்வு இயக்குநா் பொன்பாஸ்கா் தெரிவித்தாா்.