தீக்காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு
சிவகாசி அருகே சேலையில் தீப்பற்றி பலத்த காயமடைந்த இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே சேலையில் தீப்பற்றி பலத்த காயமடைந்த இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி அருகேயுள்ள ராமசந்திராபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி மகள் லாவண்யா (29). இவரது வீட்டு வாசலில் கடந்த 5-ஆம் தேதி அகல் விளக்கு ஏற்றப்பட்டது. அப்போது, படியில் ஏறிய லாவண்யா சேலையில் எதிா்பாராதவிதமாக தீப்பிடித்தது.
இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்து மனையில் சோ்க்கப்பட்டாா். எனினும் அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.