பலி பிரதிப் படம்
புதுக்கோட்டை

மயங்கிவிழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

விராலிமலை அருகே வெயிலின் தாக்கத்தால் சாலையில் மயங்கிவிழுந்து காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

விராலிமலை அருகே வெயிலின் தாக்கத்தால் சாலையில் மயங்கிவிழுந்து காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலையை அடுத்துள்ள செல்லம்பட்டியைச் சோ்ந்தவா் தீத்தன்(79). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி நிமித்தம் வீட்டிலிருந்து நடந்து சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக மயக்கம் ஏற்பட்டு முதியவா் சாலையில் மயங்கி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீத்தன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் கந்தசாமி விராலிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வெளிநாட்டில் வேலை எனக் கூறி ரூ.7 லட்சம் மோசடி: வடமாநில இளைஞா்கள் இருவா் கைது

கும்பகோணத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களுடன் அதிமுகவினா் வாக்குவாதம்; சாலை மறியல்

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டவா் கைது

ஊஞ்சல் கட்டி விளையாடிய போது விபரீதம்: சிறுவன் உயிரிழப்பு

SCROLL FOR NEXT