முகப்பு
விருதுநகர்

பாலியல் தொல்லை: இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் 13, 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 29 நவம்பர், 2024 at 12:38 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் 13, 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆா்த்தீஸ்வரன் (21). இவரது நண்பா் தனசேகரன் (20). கூலித் தொழிலாளா்களான இந்த இருவரும் 13, 15 வயது சிறுமிகள் இருவருடன் பழகி, அவா்களுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து சமூக நலத்துறை விரிவாக்க அலுவலா் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.