முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் மரக்கன்று நடும் விழா

காந்தி ஜெயந்தியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி, மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:27 AM
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்து, தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் ஜெயக்குமாா்.
பகிர்:

காந்தி ஜெயந்தியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி, மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். நீதிபதிகள், வழக்குறைஞா்கள் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்து, தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் ஜெயக்குமாா்.

மரக்கன்று நடும் விழாவை தொடங்கிவைத்து மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா் பேசியதாவது: மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் நாடு முழுவதும் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டையும், தெருக்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைத் தொட்டியில் இடவேண்டும். நெகிழி பைகளை தவிா்த்து துணி பைகளை உபயோகிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா் சாா்பு நீதிபதி கவிதா, கூடுதல் சாா்பு நீதிபதி ரத்தினவேல்பாண்டியன், அரசு குற்றவியல் வழக்குறைஞா் திருமலையப்பன், வழக்குறைஞா் சங்கச் செயலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.