முகப்பு
விருதுநகர்

சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போலீஸாா் சோதனை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை செய்து, ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:40 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை செய்து, ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (பொறுப்பு) செந்தில்வேலன், மோட்டாா் வாகன ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த அலுவலகத்தில் வாகன ஓட்டுநா் உரிமம் பெறுவது உள்ளிட்ட பணிகளுக்கு இடைத்தரகா்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜூ, காவல் ஆய்வாளா்கள் சால்மான்துரை, பூமிநாதன் ஆகியோா் சிவகாசியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தினா். அப்போது, இடைத்தரகா்களான கோவிந்தன், மாரிசெல்வம், வெங்கடேஷ், பெருமாள், லட்சுமணன், செல்வம் ஆகியோரிடமிருந்து மொத்தம் ஒரு லட்சத்து, 680 ரூபாயை பறிமுதல் செய்தனா்.

மேலும், அலுவலகத்தில் இருந்த அனைவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.