சாலையில் சென்ற போது தீப்பற்றி எரிந்தது காா்
சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது.
சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த தீபன் தனது காரில் ஸ்ரீவில்லிபுத்தூா் சென்றாா். அவா் செங்கமலநாட்சியாா்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்புறத்தில் தீப்பிடித்தது. இதையடுத்து, தீபன் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினாா்.
தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்புப் படையினா் போராடித் தீயை அணைத்தனா். எனினும், காரின் பெரும்பகுதி தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.