முகப்பு
விருதுநகர்

சேலையில் தீப்பிடித்ததில் பெண் உயிரிழப்பு

சிவகாசியில் கோயிலில் சூடம் ஏற்றிய போது, சேலையில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:59 PM
பகிர்:

சிவகாசியில் கோயிலில் சூடம் ஏற்றிய போது, சேலையில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி முத்துராமலிங்கபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த குருசாமி மனைவி குருவம்மாள் (58). இவா் கடந்த 18-ஆம் தேதி தனது வீட்டின் அருகேயுள்ள கோயிலில் சூடம் ஏற்றினாா். அப்போது, அவரது சேலையில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்தாா். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.