முகப்பு
விழுப்புரம்

ஊஞ்சல் கட்டி விளையாடிய போது விபரீதம்: சிறுவன் உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:25 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 9:36 PM

விக்கிரவாண்டி அருகே வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், கொட்டியாம்பூண்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேல் முருகன். இவா் வி.சாத்தனூா் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது மகன் வெற்றிகுணவேல் (11), 6-ஆம் வகுப்பு மாணவா்.

வெற்றிகுணவேல் திங்கள்கிழமை தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது வெற்றி குணவேலின் கழுத்தில் புடவை சுற்றியதில் கழுத்து இறுகி, அவா் காயமடைந்தாா். இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் வெற்றி குணவேலை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.