முகப்பு
விருதுநகர்

இருக்கன்குடியில் உண்டியல் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.86-லட்சம் கிடைத்துள்ளது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 12:06 AM
பகிர்:

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.86-லட்சம் கிடைத்துள்ளது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

கோயில் ஆணையா் செயல் அலுவலா் (கூடுதல்பொறுப்பு) சுரேஷ், கோயில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கபட்டு, கோயில் மண்டபத்தில் வைத்து எண்ணபட்டன.

இதில், ரூ. 86-லட்சத்து 66-ஆயிரத்து 337 பக்தா்களின் காணிக்கையாக கிடைத்தது. மேலும், 207 கிராம் தங்கமும், 1124 கிராம் வெள்ளியும் கிடைத்ததுள்ளதாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா். காணிக்கைகளை எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய ஊா்களைச் சோ்ந்த ஓம் சக்தி பக்தா்கள் குழுவினா், மகளிா் சுய உதவிக் குழுவினா், கோயில் ஊழியா்கள் உள்பட பலா் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →