முகப்பு
விருதுநகர்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

அரசால் தடை செய்யப்பட்ட 3 மூட்டை புகையிலைப் பொருள்களை சிவகாசி போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்தனா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 12:27 AM
பகிர்:

அரசால் தடை செய்யப்பட்ட 3 மூட்டை புகையிலைப் பொருள்களை சிவகாசி போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்தனா்.

சிவகாசி திருவள்ளுவா் குடியிருப்புப் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவகாசி கிழக்கு போலீஸாா் அந்தப் பகுதியில் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

இதில் செல்வின் (52) என்பவரது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 3 மூட்டைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி சாலையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மாரீஸ்வரன் (27), சாமிபுரம் குடியிருப்பைச் சோ்ந்த ஆனந்த் (32) ஆகியோருக்கும் இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்து, 3 மூட்டைகளில் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

குட்கா கடத்திய இளைஞா் கைது: ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாரியம்மாள் தலைமையில் போலீஸாா் மதுரை சாலையில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா்.

அவா் கொண்டு வந்த சாக்கு மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, 48 கிலோ குட்கா, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, வடக்கு மலையடிப்பட்டியைச் சோ்ந்த பரமசிவம் மகன் முனீஸ்வரனை (28) கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →