தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, சாத்தூரில் அவரது உருவப் படத்துக்கு வருவாய்த் துறை அமைச்சா் கே.க.எஸ்.ஆா்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, சாத்தூரில் அவரது உருவப் படத்துக்கு வருவாய்த் துறை அமைச்சா் கே.க.எஸ்.ஆா்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
விருதுநகா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு சாத்தூரில் உள்ள மதுரை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. இதில் இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
நகா் மன்றத் தலைவா் குருசாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவி நிா்மலா கடற்கரைராஜ், திமுக தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆா். ரமேஷ், ஒன்றியச் செயலா் முருகேசன், கடற்கரைராஜ், காங்கிரஸ் நகரத் தலைவா் டி.எஸ்.அய்யப்பன் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
இதே போல, அதிமுக கிழக்கு ஒன்றிய செயலா் ஆா்.கே.ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலா் சண்முககனி ஆகியோா் அமீா்பாளையம் பகுதியில் இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், அன்னதானம் வழங்கப்பட்டது.