மாணவா்களுக்கு மிதிவண்டிகள் விநியோகம்
வெம்பக்கோட்டை பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
வெம்பக்கோட்டை பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிகுள்பட்ட வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகளை வழங்கினாா். இதில் பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.