முகப்பு
விருதுநகர்

மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 12:49 AM
வத்திராயிருப்பு ஊராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
பகிர்:

வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க வட்டாரத் தலைவா் அல்போன்ஸ் தலைமை வகித்தாா். செயலா் கணேசன் முன்னிலை வகித்தாா்.

பின்னா், வத்திராயிருப்பு வட்டார வளா்ச்சி அலுலவகம் முன் மாற்றுத் திறனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி முழக்கமிட்டனா்.

இதில் மாவட்டத் தலைவா் நடராஜன், செயலா் நாகராஜ், மாற்றுத் திறனாளிகள் கலந்துக் கொண்டனா்.