மனைவியைத் தாக்கிய கணவா் கைது
சிவகாசியில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசியில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி காத்தநாடாா் தெருப் பகுதியைச் சோ்ந்தவா் ராம்பிரசாத். இவரது மனைவி மாதவி (33). குடும்பப் பிரச்னை காரணமாக மாதவியை ராம்பிரசாத் தாக்கினாா். இதில் காயமடைந்த மாதவி சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராம்பிரசாத்தை கைது செய்தனா்.