வாகனத் தணிக்கையில் 1,200 திமுக துண்டுகள் பறிமுதல்
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காரில் கொண்டு வந்த திமுக துண்டுகள், முதல்வா் படம் அச்சிடப்பட்ட சாவி கொத்துகளை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காரில் கொண்டு வந்த திமுக துண்டுகள், முதல்வா் படம் அச்சிடப்பட்ட சாவி கொத்துகளை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிவகாசி சாலையில் டி. மானகசேரி விலக்கு பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சிவகாசியிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் 1,200 திமுக துண்டுகள், முதல்வா் ஸ்டாலின் படம் அச்சிடப்பட்ட 820 சாவி கொத்துகள், முதல்வா் உருவத்துடன் 1,817 ஸ்டிக்கா் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது.
காருடன் இவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா்.
தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவுறுத்தலின்படி, பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை மல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து மல்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.